தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள்அமைச்சருமான விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (09 .07 ) காலை சென்றிருந்தார்
சுங்க திணைக்களத்தின் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே விமல் வீரவன்ச திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
விமல் வீரவன்சவிடம் இருந்து 2 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்
