உமர் அறபாத் -ஏறாவூர்
தன்னாமுனை விபத்து – காத்தான்குடியை சேர்ந்த ஒருவர் மரணம் – மேலும் 3 பேர் வைத்தியசாலையில்.
மட்டக்களப்பு – தன்னாமுனை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் , 3 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
முச்சக்கர வண்டியுடன் வேன் ஒன்று மோதியதால் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது .
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த காத்தான்குடி -சேகுல் பலாஹ் வீதியை சேர்ந்த ரஹீம் றியாஸ் என்பவர் உயிரிழந்துள்ளதுடன் , ஒரு குழந்தை, பெண் உட்பட மேலும் 3 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
#SLnews #NewsBar #newshut #TodayNews #todaynewstamil #accident
