Saturday, June 13, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

பங்களாதேசின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு

காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கடையொன்றின் உரிமையாளர் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாக பங்களாதேசின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதத்திலும் இந்த மாதத்தின் தொடக்கத்திலும் வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் மிகத் தீவிரமாக நிலையில் இருந்ததது . இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததை அடுத்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த போராட்டத்தில் மாணவர்கள் காவல்துறையினர் அப்பாவி பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

ஜூலை 19 அன்று முகமதுபூர் பகுதியில் பொலிஸார் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கடையொன்றின் உரிமையாளர் அபு சயீத் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த அமிர் ஹம்சா ஷாடில் என்பவர் டாக்கா பெருநகர நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ராஜேஷ் சவுத்ரி முன் விசாரணைக்கு வர உள்ளது.

#todaynews #Bangladesh #newsbar #SheikhHasina #foreingnews

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை