நுவரெலியா மாவட்டத்தின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளைய தினமும்(04/07/2026) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நிலவி வரும் சீரற்ற காலநிலையைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்விப் பிரிவுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, ஹட்டன், வலப்பனை, கொத்தமலை மற்றும் ஹகுரங்கெத்த ஆகிய வலயங்களைச் சேர்ந்த பாடசாலைகள் அனைத்திற்கும் நாளைய தினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் கடுமையான வானிலை காரணமாக, கண்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைளும் நாளை (04) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் தீவிர வானிலையைக் கருத்தில் கொண்டு, பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



