Saturday, June 13, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

ஹெக்கிங் செய்யப்பட்ட எட்டு கோடி ரூபாய் சம்பவத்தை பொறுப்பை ஏற்கப்போவதில்லை – ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஹெக்கிங் செய்யப்பட்ட எட்டு கோடி ரூபாய் சம்பவத்தை ஒப்புக் கொண்டாலும் அதற்கான பொறுப்பை ஏற்கப்போவதில்லை – ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தால் செய்யப்பட்ட பரிவர்த்தனையில் ஹெக்கிங் செய்யப்பட்ட எட்டு கோடி ரூபாய் சம்பவத்தை ஒப்புக் கொண்டாலும் அதற்கான பொறுப்பை ஏற்கப்போவதில்லை என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

துபாயில் உள்ள சேவை வழங்குநர் ஒருவரின் மின்னஞ்சல் (e-mail) மூன்றாம் நபரால் ஹெக்கிங் செய்யப்பட்டே இந்த பண மோசடி நடைபெற்றுள்ளது.

அத்தோடு இந்தியாவிலுள்ள சென்னை அலுவலகத்தில் இடம்பெற்ற பண மோசடியால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையிலே குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

துபாயில் அமைந்துள்ள சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றின் உத்தியோகபூர்வ மின்னஞ்சலை மூன்றாம் தரப்பினரால் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கூறுகிறது.

எவ்வாறாயினும் இந்த மோசடி கண்டறியப்பட்ட உடனேயே அந்த கணக்கிற்கு பணம் அனுப்புவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுக்கும் இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் தற்போது இலங்கையிலும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மின்னஞ்சல் மூலம் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் அதற்குரிய அங்கீகரிக்கப்பட்ட கையொப்பங்களுடன் கூடிய ஆவணங்களின் அடிப்படையிலேயே இந்த கொடுப்பனவு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறிப்பிடுகிறது.

எனினும் இந்த கொடுப்பனவுக்கான அறிவுறுத்தல்கள் விநியோகஸ்தரின் கணக்கிற்குள் ஹெக்கிங் செய்து நுழைந்த மூன்றாம் தரப்பினரால் வழங்கப்பட்டுள்ளது என்பது பணம் செலுத்தப்பட்ட பின்னரே தெரியவந்துள்ளது.

இந்த கொடுப்பனவு மற்றும் மின்னஞ்சல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்கு முற்றிலும் அப்பாற்பட்டு சேவை வழங்குநரின் மின்னஞ்சல் அமைப்பில் உள்ள பாதுகாப்பற்ற தன்மை காரணமாகவே ஏற்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட பணம் கிடைக்காமைக்கு எந்தவொரு பொறுப்பையும் ஏற்க முடியாது என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மறுத்துள்ளது.

இந்தியாவின் சென்னை நகரில் அமைந்துள்ள தங்களின் அலுவலகத்தில் இடம்பெற்ற பண மோசடி தொடர்பிலும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தற்போது தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த அலுவலகத்தின் நிதிப் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் இந்தியப் பிரஜைகள் நீண்ட காலமாக இன்வாய்ஸ்கள் கொடுப்பனவு விபரங்கள் மற்றும் கையொப்பங்கள் போன்றவற்றை மோசடியாக மாற்றி 22 மில்லியன் இந்திய ரூபாய்களை கையாடல் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை