அமைதி ஒப்பந்தத்தை மதிக்காமல் தொடர்ந்து அத்துமீறி வரும் அமெரிக்காவுக்கு, மறக்க முடியாத பதிலடியை ஈரான் வழங்கும் என அந்நாட்டு உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் அடக்குமுறை, மேலாதிக்க மனப்பான்மை மற்றும் காட்டுமிராண்டித்தனமான அணுகுமுறைகளே அதன் வெளிநாட்டுக் கொள்கையின் பிரிக்க முடியாத அங்கங்களாக மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், சர்வதேச ஒப்பந்தங்களையும் அமைதி முயற்சிகளையும் மதிக்காத அமெரிக்காவின் நடவடிக்கைகள் பிராந்திய அமைதிக்கும் உலக நிலைத்தன்மைக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.



