🍴 றீச்சாவில் களைகட்டும் மாபெரும் உணவுத் திருவிழா! – அக்க்ஷய பாத்திரத்தில் நீங்களும் கை நனைக்கலாம்
கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீச்சாவில் நடைபெறும் மாபெரும் உணவுத் திருவிழா நேற்று (07.08.2026) கோலாகலமாக ஆரம்பமானது.
நேற்று ஆரம்பமான இந்த உணவுத் திருவிழா ஆகஸ்ட் 7, 8, 9 மற்றும் 10ஆம் திகதிகள் என நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு நாளும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கலந்துகொள்ளவுள்ளதுடன், சுற்றுலாப் பயணிகளும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🎶 உணவுடன் பொழுதுபோக்கும் காத்திருக்கிறது!
உணவுத் திருவிழாவை முன்னிட்டு றீச்சாவில் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதனால் உணவுப் பிரியர்கள் மட்டுமன்றி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பொழுதைக் கழிக்க விரும்புவோருக்கும் இந்தத் திருவிழா சிறந்த அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🍲 ‘அக்க்ஷய பாத்திரத்தில்’ நீங்களும் பங்கேற்கலாம்!
இந்த மாபெரும் உணவுத் திருவிழாவிற்கு QICK FOOD அனுசரணை வழங்குகிறது.
அத்துடன், லங்காசிறி, தமிழ்வின் மற்றும் ஐபிசி தமிழ் ஆகிய ஊடகங்கள் இணைந்து இந்நிகழ்வை சிறப்பித்து வருகின்றன.
🎟️ டிக்கெட்டுகளை எவ்வாறு பெறுவது?
இந்த உணவுத் திருவிழாவில் நீங்களும் கலந்துகொண்டு, அக்க்ஷய பாத்திரத்தில் பரிமாறப்படும் உணவுகளை சுவைக்க விரும்பினால்,
📞 077 777 2354
என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு உங்கள் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.
சுவையான உணவு… இனிய இசை… சிறந்த பொழுதுபோக்கு…
றீச்சாவின் மாபெரும் உணவுத் திருவிழாவில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்! 🍽️🎶



