தெல்தெனியவில் கார் ஒன்றினுள் சடலமாக மீட்கப்பட்ட பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களுக்கான விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று(09.07.2026) மீண்டும் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த நால்வரும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



