Sunday, August 23, 2026

உள்நாடு

newsbar

மலையகம்

இந்தியா

newsbar
newsbar

இமாச்சலில் பயங்கர பேருந்து விபத்து

newsbar

🚨 இமாச்சலில் பயங்கர பேருந்து விபத்து – 7 பேர் பலி, 11 பேர் படுகாயம்

இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம், சம்பா மாவட்டத்தில் இன்று (08) அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தீசா–பைராகர் மலைப்பாதையில் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையிலிருந்து விலகி பள்ளத்தில் உருண்டு விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் பேருந்து பலத்த சேதமடைந்துள்ளது.

🚑 மீட்புப் பணிகள் தீவிரம்

விபத்து இடம்பெற்றதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மலைப்பாதையில் இடம்பெற்ற இந்த கோர விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

newsbar
newsbar

பிரபலமானவை